தேயிலை கொழுந்து பறித்த போது ஏற்பட்ட விபரீதம்- 8 பேர் வைத்தியசாலையில்..!

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 08 பேர் பொகவந்தலாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.

பொகவந்தலாவ கெக்கரஸ்ட்வோல்ட் தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே,  குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 8 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *