
இஸ்ரேல் ஈரானின் மீது நடத்திய தாக்குதலை தற்காப்பு நடவடிக்கை என நியாயப்படுத்தும் அண்மைய ஜி7 நாடுகளின் அறிக்கையை, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்கா – ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்த வேளையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாகவும், எனவே இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.