
ஈரான்–இஸ்ரேல் முரண்பாடு தொடர்பில் விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சபையில் எழுந்து நின்றவாறு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . பெரும்பான்மை உள்ளது என்பதால் ஆளும் தரப்பு தான்தோன்றித்தனமாக செயற்படுகிறது என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர். எதிர்க்கட்சியின் ஒருசில பண்டிதர்களினால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நெருக்கடிக்குள்ளாக நேரிடும் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.