
குருநாகல் -ஹெட்டிபொல நகரம் தீக்கிரையான சம்பவத்தில் தயாசிறி ஜயசேகர முன்னிலை வகித்தார். இவர் யார் என்பதை முஸ்லிம் மக்கள் நன்கு அறிவார்கள். எமது சமூகம் இவரை ஒருபோதும் ஏற்காது என்று தேசிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.எம். அஸ்லம் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, என்மீது போலியான, பாரதூரமான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.