கதிர்காம பாதயாத்திரை செல்லும் அடியவர்களுக்கு தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
சந்நிதியிலிருந்து கதிர்காமம் பாதயாத்திரையை நோக்கி 48 வது நாளாக சென்று கொண்டிருக்கும் 150 பேருக்கும் இந்த உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அம்பாறையிலுள்ள உகந்தை முருகன் ஆலயத்தில் வைத்து, ரூபா ஒருமில்லியன் பெறுமதியான அத்தியாவசியமான உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
குறித்த பாத யாத்திரிகர்கள் பானம கிராமம், குமண, யால தேசிய பூங்கா போன்ற இடங்களை கடந்து சுமார் 10 நாட்கள் கடினமான வனப்பகுதியை கடந்தே முகாம்கள் அமைக்கப்பட்டு தங்கி பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
இதேவேளை அவர்களுக்கான நீர் விநியோகம் மற்றும் அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.