இஸ்ரேல் – ஈரானின் வான்வழிப் போர் வெள்ளிக்கிழமை (20)இரண்டாவது வாரத்தில் நுழைந்தது.
மேலும், மோதலில் அமெரிக்காவின் நேரடி ஈடுபாடு குறித்து இரண்டு வாரங்களுக்குள் எந்தவொரு முடிவும் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஐரோப்பிய அதிகாரிகள் தெஹ்ரானை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு இழுக்க முயன்றுள்ளனர்.
இஸ்ரேல்-ஈரான் மோதல் எட்டாவது நாளில் நுழைந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரு நாடுகளும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை சரமாரியாக தாக்கின.
ஈரானில் உள்ள அணுசக்தி உள்கட்டமைப்பை இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியது.
தெஹ்ரான் கொத்தணிக் குண்டுகள் கொண்ட ஏவுகணைகளை ஏவியதன் மூலம் பதிலடி கொடுத்தது.
இது நடந்து வரும் மோதலில் இதுபோன்ற ஆயுதங்களைப் பயன்படுத்திய முதல் சந்தர்ப்பமாகும்.
இதில் இஸ்ரேலிய மருத்துவமனையை சேதப்படுத்திய ஒரு தாக்குதல் அடங்கும்.
இந்த மோதல் ஒரு வார கால வான்வழிப் போரில் வலுவான அதிகரிப்பைக் குறிக்கிறது.
மருத்துவமனை தாக்குதலுக்கு ஈரானின் தலைமை முழு விலையையும் கொடுக்க வேண்டியிருக்கும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் செய்தார்.
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் இஸ்ரேல் திட்டமிட்டதை விட முன்னேறி உள்ளது.
இது முந்தைய எதிர்பார்ப்புகளை விட அதிகமாகும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, ஈரான்-இஸ்ரேல் மோதலில் அமெரிக்கா நேரடியாக ஈடுபடுவதா இல்லையா என்பது குறித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்வார் என்று வெள்ளை மாளிகை வியாழக்கிழமை (19) தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தை ட்ரம்பின் செய்தியை மேற்கோள் காட்டி, வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் கூறினார்.
இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை ஈரானை தாக்கத் தொடங்கியது.
அதன் நீண்டகால எதிரி அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுப்பதே இதன் நோக்கம் என்று கூறியது.
ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் பதிலடி கொடுத்தது.
அதன் அணுசக்தி திட்டம் அமைதியானது என்று அது கூறுகிறது.
இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் ஈரானில் 639 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் அடங்குவர்.
ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது 20க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய பொதுமக்கள் இறந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள இராணுவ மற்றும் பாதுகாப்பு தொடர்பான தளங்களை குறிவைப்பதாக ஈரான் கூறியுள்ளது.
ஆனால் அது ஒரு மருத்துவமனை மற்றும் பிற பொதுமக்கள் தளங்களையும் தாக்கியுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இருவரும் இஸ்ரேலைக் கண்டித்து, பதற்றத்தைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கிரெம்ளின் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
1979 புரட்சிக்குப் பிறகு இஸ்லாமிய குடியரசு அதன் மிகப்பெரிய வெளிப்புற அச்சுறுத்தல்களில் ஒன்றை எதிர்கொண்டுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.