
கடந்த வெள்ளியன்று ஈரானின் அணு சக்தி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மத்திய கிழக்கில் புதிய பதற்றங்களின் தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது. Operation Rising lion என்ற பெயரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தளபதி ஹுசைன் சலாமி உட்பட ஈரானின் 6 அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.