வவுனியா விபுலானந்தா கல்லூரிக்கு நிரந்தர அதிபர் நியமனம்!

வவுனியாவின் முன்னனிப் பாடசாலைகளில் ஒன்றாகிய விபுலானந்தா கல்லூரிக்கு நிரந்தர அதிபர் இன்று (20) நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா, விபுலானந்தா கல்லூரியில் பதில் அதிபராக கடமையாற்றி வந்த   மோகனதாஸ் ஞானமதி, கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் 29 ஆம் திகதி தொடக்கம் இன்று வரை பதில் அதிபராக கடமையாற்றி வருகின்றார்.

அவரது கடமைக் காலத்தில் பாடசாலையின் தினசரி செயற்பாடுகள் கட்டுக்கோப்புடன் நடைபெற்று வருவதனையும், பொதுப்பரீட்சைப் பெறுபேறுகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதுடன் ஏனைய இணைபாடவிதான செயற்பாடுகளிலும் கடந்த பல ஆண்டுகளை விட பல வெற்றிகள் பெறப்பட்டுள்ளன.

சுமார் 2000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் குறித்த பாடசாலைக்கான அதிபர் நியமனம் தொடர்பில் இரண்டு நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்றிருந்தன. குறித்த நேர்முகத் தேர்வில் பதில் அதிபரும் கலந்து கொண்ட போதும் இதுவரை எவரும் நிரந்தர அதிபராக நியமிக்கப்படவில்லை. 

இந்த நிலையில் குறித்த பதில் அதிபரையே நிரந்தர அதிபராக நியமிக்குமாறு பல்வேறு தரப்பினராலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் பதில் அதிபரான மோகனதாஸ் ஞானமதி  நிரந்தர அதிபராக வடமாகாண கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *