உச்சம் தொடும் தேயிலை உற்பத்தி

 

நாட்டின் தேயிலை உற்பத்தியானது கடந்த மாதம் 2.9 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது 25.37 மில்லியன் கிலோ கிராமாகப் பதிவாகியுள்ளது. 

இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில் மாத்திரம் தேயிலை உற்பத்தியானது 113. 96 மில்லியன் கிலோகிராமாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், கடந்த வருடம் இந்த காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது தேயிலையின் உற்பத்தி 104.80 மில்லியன் கிலோகிராமாக பதிவாகியிருந்தது. 

நாட்டின் மத்திய மாகாணத்திலேயே தேயிலை உற்பத்தி அதிகரிப்பைப் பதிவு செய்திருந்ததாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *