யாழில் வந்திறங்கிய சரிகமப யூனியர்ஸ் – நாளை பிரம்மாண்ட இசைநிகழ்ச்சி!

யாழ்ப்பாணத்தில் நாளை இடம்பெறவுள்ள  இசைநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 

தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சி நிறுவனத்தின்  சரிகமப இசைக்குழுவினர் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.

குறித்த தொலைக்காட்சியில் இடம்பெற்று வரும் சரிகமப இசை நிகழ்ச்சியானது  சீனியர், யூனியர் என்ற ரீதியில் தொடர்சியாக இடம்பெற்று   உலகளவில் அனைவரையும் கவர்ந்து வருகின்றது. 

இந்த நிலையில்,  பிரம்மாண்ட இசைநிகழ்ச்சியொன்று  யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள நிலையிலேயே சரிகமப இசைக்குழுவினர்  பலாலி விமான நிலையத்தினூடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

வழமையாக இலங்கையில் தமிழகத்தின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படும் வேளை இலங்கை இசைக்குழுவினரே பங்குபற்றி இசைநிகழ்ச்சியை நடத்துகின்றனர். 

ஆனால் இந்தமுறை இடம்பெறவுள்ள பிரம்மாண்ட இசைநிகழ்ச்சியை தமிழகத்தின் பிரபலமான சதீஸ் பான்ட் இசைக்குழுவினரே பின்னணி இசையை வழங்கவுள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *