அறுவை சிகிச்சையில் சிக்கல்களை எதிர்கொண்ட நோயாளிகள் குறித்து விசாரணை!

 

அறுவை சிகிச்சைகளுக்கு உட்பட்டு சிக்கல் நிலைகளை எதிர்கொண்ட நோயாளிகள் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினரின் விபரங்களை அறிவிக்குமாறு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான விசாரணை ஆணைக்குழு கோரியுள்ளது.

விசேட நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மகேஷி சூரசிங்க விஜேரத்னவின் மேற்பார்வையின் கீழ் அறுவை சிகிச்சைகளுக்கு உட்பட்டு சிக்கல் நிலைகளை எதிர்கொண்ட நோயாளிகள் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினரின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

பாதிக்கப்பட்ட நபர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர் தொடர்பில் தகவல் தெரிந்த நபர்கள் அது தொடர்பாக அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 1954 என்ற துரித இலக்கத்துக்கு அழைப்பதன் மூலமோ, ciaboc_gen@ciaboc.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவோ அல்லது 0112502672 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்தோ தகவல்களை தெரிவிக்க முடியும். என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *