பாராளுமன்ற பணிக்குழாமினரின் உணவுக் கட்டணம் குறைப்பு!

பாராளுமன்ற பணிக்குழாமினரின் வேண்டுகோளின் பேரில், ஊழியர்களுக்கு வசூலிக்கப்படும் உணவு விலைகளை திருத்தியமைக்க பாராளுமன்ற அவைக் குழு தீர்மானித்துள்ளது. 

அந்த குழுவின் தலைவர் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நேற்று (20) பாராளுமன்றத்தில் குழு கூடியபோது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

2025.05.23 அன்று பாராளுமன்ற அவைக் குழுவு எடுத்த தீர்மானத்தின்படி, பாராளுமன்ற பணிக்குழாமினருக்கான உணவு விலைகளை நிர்வாக தர அதிகாரிக்கு மாதம் ரூ. 4,000 ஆகவும், நிர்வாக தரமற்ற ஊழியருக்கு மாதம் ரூ. 2,500 ஆகவும் 2025.06.01 முதல் வசூலிக்க பாராளுமன்ற அவைக் குழு முடிவு செய்தது. 

இருப்பினும், இந்த விலைகளை திருத்தியமைக்க பாராளுமன்ற பணிக்குழாமினரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்த குழுவால் நீண்ட நேரம் பரிசீலிக்கப்பட்டு, அதன்படி, நிர்வாக தர அதிகாரிக்கு மாதம் ரூ. 3000 ஆகவும், நிர்வாக தரமற்ற ஊழியருக்கு மாதம் ரூ. 2000 ஆகவும் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி, இந்த புதிய விலைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது. 

மேலும், மே 23 ஆம் திகதி குழுவால் தீர்மானிக்கப்பட்டபடி, பாராளுமன்ற பொது உணவகத்தில் உணவுகளை கொள்வனவு செய்யும், பாராளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகள், பொலிஸ் அதிகாரிகள், ஜனாதிபதி/பிரதமர் பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் ஊடகவியாளாலர்களுக்கும் தற்போது வசூலிக்கப்படும் உணவுக் கட்டணங்கள் மாறாமல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *