இலங்கையில் மின்சாரம் தாக்கி 550 பேர் பலி

இலங்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்சாரம் தாக்கி 550 பேர் மரணித்துள்ளனர் என  இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 120 என ஆணையம் தெரிவித்துள்ளது.

மின்சாரம் தாக்கி இறந்தவர்களில் சுமார் நாற்பது சதவீதம் பேர் பயிர் பாதுகாப்பு மற்றும் விலங்குகளைக் கொல்வது போன்ற நோக்கங்களுக்காக சட்டவிரோதமாக பதிக்கப்பட்ட மின்சார கம்பிகள் காரணமாக ஏற்பட்டுள்ளது.

இந்த இறப்புகளில் பெரும்பாலானவை கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களிலிருந்து பதிவாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையம் கண்டறிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *