1979 புரட்சிக்குப் பின்னர், இஸ்லாமியக் குடியரசுக்கு எதிரான மிகப்பெரிய மேற்கத்திய இராணுவ நடவடிக்கையில் இஸ்ரேலுடன் இணைந்து, ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்களை அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை (22) தாக்கியதை அடுத்து, உலகம் ஈரானின் பதிலடிக்கு தயாராக உள்ளது.
ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி தளத்திற்கு மேலே உள்ள மலையில் அமெரிக்கா 30,000 பவுண்டுகள் எடையுள்ள பதுங்கு குழி குண்டுகளை வீசிய ஒரு நாளுக்குப் பின்னர் ஈரான் தன்னைத் தற்காத்துக் கொள்ள சபதம் செய்தது.
அமெரிக்கத் தலைவர்கள் தெஹ்ரானை பின்வாங்குமாறு வலியுறுத்தினர்.
அதேநேரம், அமெரிக்க நகரங்களில் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர்.
ஞாயிற்றுக்கிழமை சமூக தளத்தில் டொனால்ட் ட்ரம்ப் எழுதிய பதிவில், ஈரானில் ஆட்சி மாற்றம் குறித்த கருத்தை எழுப்பினார்.
“‘ஆட்சி மாற்றம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அரசியல் ரீதியாக சரியானதல்ல, ஆனால் தற்போதைய ஈரானிய ஆட்சியால் ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை என்றால், ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது??? என்று கேள்வி எழுப்பினார்.
ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை உள்கட்டமைப்பை குறிவைத்து இஸ்ரேலிய தாக்குதல்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்த பின்னர், தெஹ்ரானின் அணுசக்தி திட்டத்தை முடக்கும் நோக்கத்துடன் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்த ட்ரம்ப் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவுக்கு அமைவாக நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் ஒரு பெரிய விரிவாக்கமாகவும், இஸ்ரேலுடன் மோதலில் முதல் நேரடி அமெரிக்க இராணுவ ஈடுபாடாகவும் வந்தன.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அமெரிக்கப் படைகள் ஈரானின் உள்ளே ஆழமாகத் தாக்கியதாகவும், இதனால் அந்நாட்டின் அணுசக்தி தளங்களுக்கு “பெரும் சேதம்” ஏற்பட்டதாகவும், இது ஒரு புல்ஸ்ஐ தாக்குதல் என்றும், ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் அணுசக்தி நிலையங்களை தாக்குதலில் பலத்த சேதங்களுக்கு உள்ளானதாகவும் டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று மீண்டும் வலியுறுத்தினார்.
ஈரானின் நிலத்தடி ஃபோர்டோ அணுமின் நிலையத்தின் மீதான அமெரிக்கத் தாக்குதலின் விளைவாக ஆழமாகப் புதைக்கப்பட்ட தளமும் அது வைத்திருந்த யுரேனியம் செறிவூட்டும் மையவிலக்குகளும் கடுமையாக சேதமடைந்தன அல்லது அழிக்கப்பட்டதாக வணிக செயற்கைக்கோள் படங்கள் சுட்டிக்காட்டின.
எனினும், அந்த தளத்தின் நிலை உறுதிப்படுத்தப்படவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி நிறுவனம், அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பின்னர் தளத்திற்கு வெளியே கதிர்வீச்சு அளவுகளில் எந்த அதிகரிப்பும் ஏற்படவில்லை என்று கூறியது.
நிலத்தடியில் ஏற்பட்ட சேதத்தை இன்னும் மதிப்பிட முடியவில்லை என்று அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி CNN இடம் கூறியுள்ளார்.
ஃபோர்டோவில் உள்ள அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் பெரும்பகுதி தாக்குதலுக்கு முன்னர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக ஈரானிய மூத்த வட்டாரம் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் உறுதிபடுத்தியுள்ளது.
அமெரிக்காவில் அச்சுறுத்தல் சூழல்
சைபர் தாக்குதல்கள் அல்லது இலக்கு வைக்கப்பட்ட வன்முறைக்கான சாத்தியக்கூறுகளைக் காரணம் காட்டி, அமெரிக்காவில் “அச்சுறுத்தல் சூழல் அதிகரித்துள்ளதாக” அந் நாட்டு பாதுகாப்புத் துறை எச்சரித்தது.
இதன் விளைவாக அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் சட்ட அமலாக்க அதிகாரிகள் மத, கலாச்சார மற்றும் இராஜதந்திர தளங்களை மையமாகக் கொண்டு ரோந்துப் பணிகளை அதிகரித்துள்ளனர்.
பதிலடி கொடுக்கும் வரை இராஜதந்திரத்திற்கு திரும்ப முடியாது
அமெரிக்க தளங்களை குறிவைப்பதன் மூலமோ அல்லது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை முடக்க முயற்சிப்பதன் மூலமோ அமெரிக்காவிற்கு எதிரான பழிவாங்கும் அச்சுறுத்தல்களை தெஹ்ரான் இதுவரை பின்பற்றவில்லை.
எனினும் அது வெகு காலம் நீடிக்காது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்தான்புல்லில் பேசிய ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி, தனது நாடு சாத்தியமான அனைத்து பதில்களையும் பரிசீலிக்கும் என்று கூறினார்.
அது பதிலடி கொடுக்கும் வரை இராஜதந்திரத்திற்கு திரும்ப முடியாது என்றும் அவர் கூறினார்.
ஹார்முஸ் நீரிணை தொடர்பான அச்சுறுத்தல்
மேற்கத்திய நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் அச்சுறுத்தலாக ஈரானின் அச்சுறுத்தலாக பரவலாகக் கருதப்படும் ஒரு படியாக, அதன் நாடாளுமன்றம் ஹார்முஸ் நீரிணையை மூடுவதற்கான நடவடிக்கைக்கு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தது.
உலகளாவிய எண்ணெய் கப்பல்களில் கிட்டத்தட்ட கால் பகுதி ஈரான் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் பகிர்ந்து கொள்ளும் இந்த குறுகிய நீர்வழிகள் மூலமாக செல்கின்றன.
நீரிணையை மூடுவதன் மூலம் வளைகுடா எண்ணெய் வர்த்தகத்தை மூச்சுத் திணறடிக்க முயற்சிப்பது உலகளாவிய எண்ணெய் விலைகளை முன்னெப்போதும் இல்லாத அளவிக்கு உயர்த்தக் கூடும்.
இது உலகப் பொருளாதாரத்தை தடம் புரளச் செய்யலாம்.
மேலும், வளைகுடாவைத் திறந்து வைத்திருக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய ஐந்தாவது கடற்படையுடன் மோதலுக்கு வழிவகுக்கும்.
எண்ணெய் விலை உயர்வு
பிரெண்ட் மசகு எண்ணெய் மற்றும் அமெரிக்க மசகு எண்ணெய் விலைகள் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி மாதத்திலிருந்து மிக உயர்ந்த மட்டங்களுக்கு உயர்ந்தன.
பிரெண்ட் மசகு எண்ணெய் $3.20 அதிகரித்து $80.28 ஆகவும், அமெரிக்க மசகு எண்ணெய் $2.89 ஆகவும் $76.73 ஆகவும் உயர்ந்தன.
போர் நிறுத்தத்திற்கான அழைப்பு
ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 15 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு மத்திய கிழக்கில் உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற முன்மொழிந்தன.
அமெரிக்க தாக்குதல்கள் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஞாயிற்றுக்கிழமை கூடியமையும் குறிப்பிடத்தக்கது.