முட்டை விலைகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்க பொறிமுறை!

சமூக ஊடகங்கள் மூலம் தினமும் முட்டை விலைகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்க ஒரு பொறிமுறையை அமைக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இடைத்தரகர்கள் முட்டைகளை விற்பனை செய்வதன் மூலம் பெரும் இலாபம் ஈட்டுகிறார்கள் என்ற அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 

தற்போது சந்தையில் ஒரு முட்டை 28 ரூபா முதல் 38 ரூபா வரை விற்கப்படுகிறது. 

மேலும் கடந்த சில மாதங்களாக முட்டைகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

முட்டை விலை உயர்வுக்கு இடைத்தரகர்களின் செயல்பாடுகளும் ஒரு காரணம் என்று பல தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கிடையில், முட்டை விலைகள் மேலும் அதிகரிப்பதைத் தடுக்கும் நடவடிக்கையாக, சமூக ஊடகங்கள் மூலம் தினமும் முட்டை விலைகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்க ஒரு பொறிமுறையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *