வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான பிங்கோயா தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 90 பேர் கொண்ட குழு, அந்தத் தோட்டத்தைச் சேர்ந்த அரசியல் செல்வாக்குடைய எஸ். விக்னேஸ்வரன் என்பவர், தோட்டத்தின் மயானத்திற்குச் சொந்தமான சுமார் 02 ஏக்கர் நிலத்தை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி அதனை மீளப் பெற்றுத் தரக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்ததுடன் ஜனாதிபதியிடம் மனு ஒன்றைக் கையளிக்க ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்திருந்தனர்.