ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீளப் பெற்றுத் தருமாறு கோரி பிங்கோயா தோட்ட மக்கள் கொழும்பில் போராட்டம்

 

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான பிங்கோயா தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 90 பேர்  கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை (23) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான பிங்கோயா தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத்தைச் சேர்ந்த அரசியல் செல்வாக்குடைய நபரொருவர்,  தோட்டத்தின் மயானத்திற்குச் சொந்தமான சுமார் 02 ஏக்கர் நிலத்தை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

நிலத்தை மீளப் பெற்றுத் தரக் கோரி ஜனாதிபதியிடம் மனு ஒன்றைக் கையளிக்க ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *