
அமெரிக்காவின் போர் நிறுத்த அறிவிப்பை ஈரானும் இஸ்ரேலும் மதிப்பளிக்க வேண்டும் என துருக்கி வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இருதரப்பு போர் நிறுத்தத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முன்வர வேண்டும் என துருக்கிய வெளியுறவு அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.