சமூக பாதுகாப்பு சபையில் முதலிடம்; மூதூர் வெருகல் பிரதேச செயலாளர்கள் கௌரவிப்பு!

திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஏற்பாட்டில் 2024 ஆம் ஆண்டு தேசிய மட்ட அடைவினை அடைந்து திருகோணமலை மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்ற மூதூர் பிரதேச செயலக பிரதேச செயலாளரும்

 பிரதேச செயலக ரீதியில் தனது பிரதேச அடைவு மட்டத்தினை முழுமையாக பூர்த்தி செய்த வெருகல் பிரதேச செயலக பிரதேச செயலாளரும் இன்று (24) மாவட்ட செயலகத்தில் வைத்து கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையிலும் மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்களின் வழிகாட்டலிலும் நடைபெற்றது.

இதன்போது மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் மற்றும் வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் ஆகியோருக்கு அரசாங்க அதிபரின் மெற்சுரை (Government Agent Commendation) வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *