போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல் – தெஹ்ரானில் ரோடர் அமைப்பு அழிப்பு!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக, தெஹ்ரானில் உள்ள ரேடார் அமைப்பொன்றை அழித்ததாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். 

இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் இரு வாரங்களாகத் தொடர்ந்த நிலையில் இன்று இரு தரப்பும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இணங்கியதாக இரு தரப்பு அரசும் தெரிவித்திருந்தது.

இஸ்ரேல் – ஈரான் தாக்குதலால் 400 க்கும் அதிகமான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதுடன் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் இந்தத் தாக்குதலால் எண்ணெய் விலையில் வீழ்ச்சி பதிவாகியதுடன் எரிபொருள் உள்ளிட்ட அத்தியவாசிய தேவைகளும் பாதிக்கப்பட்டது. 

இந்தநிலையில் இருதரப்பும் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இணங்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கோரிவந்த நிலையில் இன்று இருதரப்பும் போர்நிறுத்தத்திற்கு இணங்கியது. 

எனினும் குறித்த ஒப்பந்தத்தை இருதரப்பும் மீறி தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாகவே தெஹ்ரானில் உள்ள ரேடார் அமைப்பு தாக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. 

இருப்பினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, தாக்குதல்களை நடத்தவில்லை என்றும் இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *