விரைவில் ஆரம்பமாகும் விமான சேவைகள்; இஸ்ரேலுக்குச் செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!

பல இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் டெல் அவிவ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான சர்வதேச சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.

இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமையைப் பொறுத்து, வழக்கமான சர்வதேச விமானங்கள் விரைவில் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது இலங்கையில் உள்ளவர்கள் இஸ்ரேலுக்கான விமான ஏற்பாடுகள் குறித்து அந்தந்த நிறுவனங்களுடன் சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதிக தேவை காரணமாக, ஒரே நேரத்தில் பல நபர்கள் பயணிக்க எதிர்பார்க்கப்படுவதால் பயணச்சீட்டுகளை பெறுவதில் தாமதம் அல்லது நெரிசல் ஏற்படக்கூடும் என்று நிமல் பண்டாரா கூறினார்.

டெல் அவிவ் செல்லும் விமானங்கள் அல்லது டெல் அவிவ் விமான நிலையத்தின் நிலைமை குறித்து மேலும் தகவலுக்கு, அனைத்து தனிநபர்களும் இலங்கை தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *