சீரற்ற நிலையில் ஹட்டன் பேருந்து நிலையம்!

ஹட்டனிலுள்ள  அரச, தனியார் பேருந்து நிலையங்கள்  மக்களின் பாவனைக்கு உதவாத நிலையில் சீரற்றுக் காணப்படுகின்றது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் ஹட்டன் அரச மற்றும் தனியார் பேருந்து நிலையம்  கழிவுநீர் தேங்கியுள்ளது. 

இதனால் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள், பயணிகள், பாடசாலை மாணவர்கள்  எனப் பலரும் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். அத்துடன் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறை பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளது . அங்கு செல்லும் பயணிகளிடம் அதிக அளவு கட்டணம் 40 ரூபா அறவிடப்படுகிறது.

கட்டணம் அறவிடுவதற்குப்  பற்றுச்சீட்டு வழங்குவதும் இல்லை. இதனை  ஹட்டன் நகரசபையும் கண்டுகொள்வது இல்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 

எனவே பேருந்து நிலையத்தையும் அங்குள்ள மலசலகூடத்தையும் சீர் செய்து மக்களின் பாவனைக்குக் கையளிப்பதற்கு ஹட்டன் நகரசபை மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்  விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *