க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 இல் ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த  உயர்தரப் பரீட்சை  எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசெம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. இது தொடர்பில் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது, 

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான ஒன்லைன் விண்ணப்பங்கள் ஜூன் 26 முதல் ஜூலை 21 வரை ஏற்றுக்கொள்ளப்படும் . பாடசாலை மாணவர்கள் தங்கள்  அதிபர்கள்  மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

அதே நேரத்தில் தனியார் மாணவர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டை (NIC) எண்ணைப் பயன்படுத்தி சுயாதீனமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஐப் பார்வையிட்டு வழிகாட்டுதல்களை கவனமாக அவதானித்து அதற்கேற்ப தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பாடசாலை  விண்ணப்பங்களுக்கான பயனர் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் ஏற்கனவே பாடசாலை அதிபர்களுக்கு  வழங்கப்பட்டுள்ளன. விண்ணப்பத்தின் அச்சிடப்பட்ட நகலை எதிர்கால குறிப்புக்காக தக்கவைத்துக்கொள்ள வேண்டும் . 

மேலும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 21 ஆம்  திகதி நள்ளிரவுக்கு பின்னர் எந்த சூழ்நிலையிலும் நீட்டிப்பு வழங்கப்படாது . 

பரீட்சை தொடர்பான தகவல்களுக்கு வேட்பாளர்கள் தேர்வுத் துறையை தொடர்பு கொள்ளலாம். 

அதற்கமைய தொலைபேசி எண்களான  011-2784208 / 011-2784537 / 011-2785922 , ஹாட்லைன்: 1911, மின்னஞ்சல்: gcealexam@gmail.com உள்ளிட்டவைகளூடாகத் தொடர்புகொள்ளலாம். – என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *