ஈரான் மீதான தாக்குதலை ஹிரோஷிமாவுடன் ஒப்பிட்டு பேசிய ட்ரம்!

ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்கத் தாக்குதல்களின் தாக்கத்தை ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (25) இரண்டாம் உலகப் போரின் முடிவுடன் ஒப்பிட்டுப் பேசினார்.

அதாவது, அமெரிக்க நடவடிக்கையை ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மற்றும் நாகசாகி குண்டுவெடிப்புகளுடன் ட்ரம்ப் ஒப்பிட்டார்.

இந்த தாக்குதலில் 150,000 முதல் 246,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

இவர்களில் பொரும்பாலானோர் பொது மக்கள்.

அதேநரேம், ஈரான் மீதான தாக்குதல் தொடர்பில் கிடைக்கக்கூடிய உளவுத்துறை அறிக்கைகள் முடிவில்லாதவை என்றாலும் சேதம் கடுமையானது என்று வாதிட்டார்.

Comparing US Iran strike to Hiroshima, Trump plays down intelligence report

ஈரானின் அணுசக்தி திட்டம் அழிக்கப்பட்டுவிட்டதாக ட்ரம்ப் மற்றும் நிர்வாக அதிகாரிகள் கூறிய போதிலும், தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தின் செயற்பாடுகளை சில மாதங்கள் மட்டுமே தாமதப்படுத்தும் என்று அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செவ்வாயன்று செய்தி வெளியிட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதியின் மேற்கண்ட கருத்துக்கள் வந்துள்ளன.

அதேநேரம், அமெரிக்கத் தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி நிலையங்களை “கடுமையாக சேதப்படுத்தியதாகவும்” அவற்றின் செயற்பாடுகளை பல ஆண்டுகள் பின்னோக்கிச் நகர்த்தியதாகவும் மத்திய புலனாய்வு அமைப்பு (CIA) தலைவர் கூறியுள்ளார்.

CIA இன் பணிப்பாளரான ஜான் ராட்க்ளிஃப், தாக்குதலில ஈரானின் முக்கிய இடங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறினார்.

இருப்பினும் ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக அவர் அறிவிக்கவில்லை.

அமெரிக்க தாக்குதலுக்கு பின்னரும், ஈரானின் அணுசக்தி திட்டத்தின் முக்கிய கூறுகள் அப்படியே இருந்ததாக பென்டகன் உளவுத்துறை நிறுவனத்திடமிருந்து கசிந்த முதற்கட்ட மதிப்பீடு தெரிவித்த ஒரு நாளுக்குப் பின்னர் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *