
கடந்த 12 நாட்களாக உலக நாடுகளை பெரும் பதற்றத்தில் ஆழ்த்திய ஈரான் – இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்திருப்பது, அனைவருக்கும் சற்று பெருமூச்சு விடக்கூடிய ஒரு செய்தியாகும். இந்தப் போர், ஈரானால் தொடங்கப்படவில்லை, மாறாக இஸ்ரேலின் காரணமற்ற தாக்குதல்களாலேயே தொடங்கியது என்பது சர்வதேச அளவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு உண்மையாகும். எவ்வாறாயினும், இந்த மோதல் நீண்ட காலம் தொடராமல் ஒரு முடிவுக்கு வந்தமை பெரும் ஆறுதலான ஒரு செய்தியாகும்.

