
மஹர மற்றும் ஏக்கல பள்ளிவாசல்களின் பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கிறோம். அத்துடன், அப்பகுதிகளுக்கு களவிஜயங்களை மேற்கொண்டு ஆராய்ந்து நிலமைகளை சீர்செய்ய வேண்டியுள்ளது என முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் ஆளும் தரப்பு பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர்.