
காசாவில் இஸ்ரேலிய இராணுவத்தினர் நேற்று புதன்கிழமை நடத்திய கடுமையான தாக்குதல்களில் 51 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர் என்று காசா சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு காசா நகரத்தின் ஷெஜையா பகுதியில் நடந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தெரியவருகிறது.