குறைந்த விலையில் உப்பு! – நாடு முழுவதும் விநியோகத்திற்கு தயாராகும் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம்!

நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், சந்தையில் உப்பின் விலை குறைக்கப்படுவதுடன், அதிகபட்ச சில்லறை விலையில் உப்பை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அண்மையில் அரசாங்கம் உப்பு இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தியதை அடுத்து, போதுமான அளவு உப்பு கையிருப்பில் உள்ளதாலும், இவற்றை உடனடியாக சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய விலைப்பட்டியலின் கீழ்,  

– 1 கிலோ கல் உப்பு – ரூ.180  

– 1 கிலோ தூள் உப்பு – ரூ.240  

– 400 கிராம் தூள் உப்பு – ரூ.120 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

மேலும், நாடு முழுவதும் இந்த விலையில் பொதி செய்யப்பட்ட உப்புகள் விரைவில் விநியோகிக்கப்படும் என்றும், அதைத் தொடர்ந்து நுகர்வோர் எளிதில் இவற்றை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *