இடமாற்றத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு திருமலையில் கவனயீர்ப்பு!

இடமாற்றத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு  வலியுறுத்தி  திருகோணமலையில் இணைந்த சேவை உத்தியோகத்தர்களினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று  (27) முன்னெடுக்கப்பட்டது.

 

திருகோணமலை  மாவட்ட செயலகத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள பிரதேச செயலக மட்டத்திலான இடமாற்றம் தாபன விதிக்கோவைக்கு முரணானது. இதனை மீள் பரிசீலனை செய்யுமாறு வழியுறுத்தி திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்  முன்னெடுக்கப்பட்டது. 

கவனயீர்ப்பில் இடமாற்ற சுற்றறிக்கையில் பிழைகளை விட்டுவிட்டு பழிவாங்கும் நோக்கத்துடன் தூரப் பகுதிகளுக்கு பிரதேச செயலக ரீதியில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை உத்தியோகத்தர்களை உடல், உள ரீதியாக பாதிக்க வைத்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் கவலை தெரிவித்தனர். 

அத்தோடு இடமாற்றத்தில் பிரதேச செயலகங்களுக்கிடையிலும் ஆண், பெண் என்ற ரீதியிலும் பாகுபாடு காட்டப்பட்டுள்ளனர் என்றவாறான விடயங்களை முன்வைத்து  கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தர்.  

மேலும் நீதியான இடமாற்றம் வேண்டும், பாரபட்சமற்ற இடமாற்றத்தை ஏற்படுத்துங்கள், நியாயமற்ற இடமாற்றத்தினை உடனடியாக திரும்ப பெறவும் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்டவாறான கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *