
ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது கடந்த ஞாயிறன்று அமெரிக்க விமானப்படையும் கடற்படையும் தாக்குதல்களை நடத்தியிருந்தன. போர்டோ யுரேனியம் செறிவூட்டல் நிலையம், நடான்ஸ் அணுசக்தி நிலையம் மற்றும் இஸ்பஹான் அணுசக்தி தொழில்நுட்ப மத்திய நிலையம் ஆகியவையே தாக்குதலுக்கு இலக்கான இடங்களாகும். நார்த்ரோப் B -2 ஸ்பிரிட் ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்களால் சுமந்து செல்லப்பட்ட பதினான்கு GBU-57A/B MOP 30,000 இறாத்தல் கொண்ட (14,000 கிலோ) ‘பதுங்கு குழி அழிப்பு’ குண்டுகளாலும், நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட டோமாஹாக் ஏவுகணைகளாலும் குறிவைக்கப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.