மத்தியகிழக்கில் அசாதாரண சூழல் – இஸ்ரேல் விசாவை நீடிக்க தீர்மானம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும்  அசாதாரண  சூழ்நிலை காரணமாக, நாட்டை வந்தடைந்த இஸ்ரேல் பயணிகளின் விசாவை நீடிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் நேற்று (27) அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் தெரிவித்ததாவது, 

இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு ஆணையகம் (PIBA) இஸ்ரேலில் உள்ள தங்கள் சொந்த வேலைவாய்ப்புகளுக்குத் திரும்பும் நம்பிக்கையுடன் மறு நுழைவு விசாவுடன் இலங்கைக்கு வந்தவர்களின் மறு நுழைவு விசாவின் செல்லுபடியாகும் காலத்தை  ஜூலை 31 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, இஸ்ரேலுக்கான சர்வதேச விமானங்கள் தற்போது தொடங்கியுள்ளதால், மறு நுழைவு விசாவில் இலங்கைக்கு வந்தவர்கள் மறு நுழைவு விசா காலாவதியான பிறகும்  ஜூலை 31  வரை இஸ்ரேலில் வேலைக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக அனைத்து தொடர்புடைய நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.- என்றுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *