விபத்தில் சிக்கிய படகு – காணாமல் போன மீனவர்களில் ஒருவர் மீட்பு!

விபத்துக்குள்ளான மீன்பிடி படகிலிருந்த நான்கு மீனவர்களில் ஒருவர் இன்று மீட்கப்பட்டுள்ளார் என்று கடற்படை தெரிவித்துள்ளது. 

நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள தெவுந்தர மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட மீன்பிடி படகு  ஒன்று  வர்த்தக கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான படகில் நான்கு மீனவர்கள் இருந்துள்ளனர். 

படகு விபத்துக்குள்ளாகிய வேளை படகிலிருந்த நால்வர் காணாமல் போயிருந்தனர். காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகளில் கடற்படையினர் ஈடுபட்டிருந்த நிலையில் இரண்டு மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். 

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற தேடுதல் பணியில் விபத்துக்குள்ளான மீன்பிடி  படகில் சிக்கிய நிலையில் மீனவர் ஒருவர்  மீட்கப்பட்டுள்ளார். 

மீட்கப்பட்ட மீனவர்,   கடற்படையினரால் காலி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டார் என்றும் குறித்த மீனவர் நலமுடன் உள்ளார் என்றும் கடற்படை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *