CID யின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர நியமனம்!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவுக்கு குறித்த  நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திருமதி இமேஷா முத்துமாலை கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply