இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (Blood Donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும்.
அந்த வகையில் வவுனியா ஸ்ரீராமபுரம் மெதடிஸ்த திருச்சபையின் 211வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் ஒன்றினை ஏற்படுத்தியுள்ளனர்.
உதிரம் கொடுப்போம் உ யிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படவுள்ள இவ் இரத்ததானமுகாம் நாளை (30.06.2025) காலை 9.00மணிக்கு வவுனியா ஸ்ரீராமபுரம் மெதடிஸ்த திருச்சபையில் இடம்பெறவுள்ளது.
எனவே இவ் இரத்ததான முகாமில் அனைவரையும் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.