சுற்றுலாப் பயணிகள் செலவிடும் டொலர்களை கண்காணிக்க திட்டமொன்று அவசியம்! திலித் ஜெயவீர வலியுறுத்து

வரிசெலுத்தும் உள்நாட்டுக் கைத்தொழில் முயற்சியாளர்களை கட்டியெழுப்ப ஒரு வேலைத்திட்டம் தேவைப்படுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் திலீத் ஜெயவீர தெரிவித்துள்ளார். 

இன்றையதினம் பாராளுமன்றில் நிதி செயல்நுணுக்கக்கூற்று சட்டமூலத்தை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சுற்றுலாத்துறையூடாக இந்தநாட்டிற்கு ஒரு புதிய செல்வத்தை உருவாக்குவது அவசியமாக காணப்படுகிறது. 

குறைந்த செலவில் சுற்றுலாப்பயணிகளை அழைப்பதன் காரணமாக இந்த நாட்டு மக்கள் ஒரு சுமையை சுமக்க வேண்டியிருக்கிறது.

 இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எவ்வளவு தொகையை செலவழிக்கிறார்கள் என்பதனை அறிய எம்மிடம் எந்தப் பொறிமுறையும் இல்லை. 

இதனை டிஜிட்டல் மயமாக்குங்கள். அதற்கான நடவடிக்கைகளை எடுங்கள். 

இந்த நிதி செயல் நுணுக்க கூற்று சட்டமூலத்தில் எதுவும் இல்லை. வரவுசெலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டவை எதுவும் இல்லை எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *