நேர பிரச்சினையை தீர்க்கக் கோரி கிளிநொச்சி சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் நேர பிரச்சினையை தீர்க்குமாறு கோரி இலங்கை போக்குவரத்துச்சபையின்  கிளிநொச்சி சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சி சாலையிலிருந்து கிளிநொச்சி மாவட்டத்திற்கான எந்த சேவையும் இடம்பெறவில்லை. வட்டக்கச்சி, உருத்திரபுரம், பூநகரி ,முழங்காவில் போன்ற பகுதிகளுக்கான பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை.

 தொடர்ச்சியாக குறித்த பகுதிகளில் நேரம் தொடர்பாக தனியார் பேருந்துகளுடன் பிரச்சனை ஏற்படுவதாகவும் குறித்த பிரச்சனையை தீர்ப்பதற்கு வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே அரச பேருந்து சேவையினருக்கும் தனியார் பேருந்து சேவையினருக்கும் இடையே ஏற்பட்ட நேரப்பிரச்சினைகளால் மோதல் ஏற்பட்டிருந்தைமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *