இன்று பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று! விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்று  பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாலை அல்லது இரவு நேரங்களில் ஊவா மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை ஏற்படும் சாத்தியம் உள்ளது.

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள் மற்றும் வடக்கு, வடமத்திய, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று, மின்னல் போன்ற அபாயங்களை கருத்தில் கொண்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *