திருகோணமலை கலைமகள் மகா வித்தியாலத்திற்கு ரூபா 60000 பெறுமதியான இசைக்கருவி வழங்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் உறவினர் ஊடக இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனால் இன்று (07)பாடசாலையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது தமிழ் மொழி தினப் போட்டியில் வலய மட்ட மாகாண மட்டத்தில் பங்கு பற்றி வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலையின் அதிபர் சட்சிவானந்தம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், பிரதேசசபை உறுப்பினர் துரைராசா தனராஜ், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




