ஆனையிறவில் ஹயஸ் வானை மோதித்தள்ளிய டிப்பர்!

ஆனையிறவில் டிப்பருடன் கயஸ் மோதி பாரியளவான விபத்து ஏற்பட்டுள்ளதுடன் பயணிகள் பலத்த காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது

இச்சம்பவம் இன்றையதினம் மாலை 5மணியளவில் கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் இடம்பெற்றுள்ளது 

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருவது

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா சென்ற டிப்பருடன் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கயஸ் நேருக்கு நேர் மோதி பாரியளவான விபத்து ஏற்பட்ட நிலையில் கயஸில் பயணித்த பயணிகள் எந்த வித உயிர்ச் சேதங்களும் இன்றி பலத்த காயங்களுடன் தப்பித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன 

பலத்த காயம் அடைந்த பயணிகள் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

காணொளியை பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://web.facebook.com/share/v/1N5RTda2W2/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *