தேனெடுக்கச் சென்ற தந்தை இடையில் நடந்த சோகம்:தேனுக்கு காத்திருந்த பிள்ளைகளுக்கு- விழுந்த பேரிடி!

குமாரசாமிபுரம் பகுதியில் தேன் எடுப்பதற்காக சென்றவர் மரத்தில் ஏறிய போது மரத்திலிருந்து தவறி விழுந்தநிலையில் உயிரிழந்துள்ள துயரச்சம்பவம்  இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது

குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த  51 வயதுடைய பெருமாள்துரை துரைராசா என்னும் நான்கு பிள்ளைகளின் தந்தையே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது

தேன் எடுப்பதற்காக மரத்தில் ஏறிய போது மரத்திலிருந்து தவறி விழுந்தநிலையில் உறவினர்களில் உதவியுடன் சிகிச்சைகளுக்காக தருமபுர வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பொழுது ஏற்கனவே இநற்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளின் பின்னர்  சடலத்தினை  உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

 இச்சம்பவம் தொடர்பாக தருமபுர பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

காணொளி பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://web.facebook.com/share/v/16gSaUG3jJ/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *