மதுபான போத்தல் ஒரு தொகையுடன் ஒருவர் கைது

 

லிந்துலை, மட்டுக்கலை பகுதியில் போய தினத்தில் சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபான போத்தல் ஒரு தொகையுடன் ஒருவர் நேற்று நுவரெலியா பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் போய தினங்களில் அதிக விலைக்கு சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்று வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த நபரிடமிருந்து 30 முழு போத்தல்களும், 96 ரா மதுபான போத்தல்களும், மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர் மற்றும் மதுபான போத்தல்கள் இன்று நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *