இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம்!

மட்டக்களப்பில் இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி எதிர்ப்பு பதாதையில் கையொப்பமிடும் போராட்டம் ஒன்றினை சம உரிமை இயக்கம் இன்று ஆரம்பித்து வைத்தது.

காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கு, இன்னொரு அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம், பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்துசெய் அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்யும் அரசியலமைப்பிற்காகப் போராடுவோம் என்ற தலைப்பில் எதிர்ப்பு பதாதையில் கையொப்பமிடும் போராட்டம் ஒன்றை சம உரிமை இயக்கம் மட்டக்களப்பு பஸ்தரிப்பு நிலையத்தில் இன்று (12) ஆரம்பித்து வைத்தனர்.

மாவட்ட இணைப்பாளர் கிருபாகரன் தலைமையில் எதிர்ப்பு பதாதையில் கையொப்பமிடும் போராட்டம் இன்று காலை 11.00 மணிக்கு மட்டக்களப்பு பிரதான பேருந்து தரிப்பிடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் போது ஈரோஸ் ஜனநாயக முன்னணி கட்சியின் தலைவர் இராஜேந்திரா, சம உரிமைகள் இயக்க உறுப்பினர்கள், உட்பட பலர் கலந்து கொண்டு எதிர்ப்பு பதாதையில் கையொப்பமிடும் நடவடிக்கையை ஆரம்பித்து வைத்து துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

இதன் போது அங்கு அதிகமான பொதுமக்கள் ஆர்வமாக சென்று இந்த எதிர்ப்பு பதாதையில் கையொழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *