ரணிலின் தீர்மானத்திற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு

 

ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக, அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த நடவடிக்கைக்கு பல கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பேருவளை மாநகர சபையில் அதிகாரத்தைப் பெறுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி, திசைகாட்டியுடன் இணைந்ததே இதற்குக் காரணம்.

நேற்று (15) மாலை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அவரது அலுவலகத்தில் சந்தித்தபோது இந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து அதிருப்தி தெரிவித்து வரும் கூட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி எதிர்க்கட்சிகளை இணைக்க எடுத்த நடவடிக்கையால் தங்கள் கட்சிகளும் பெரும் அசௌகரியத்தில் உள்ளதாகக் கூறியுள்ளனர்.

மத்திய கலாச்சார நிதியத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைச்சரவை துணைக் குழு நியமிக்கப்பட்ட பின்னர், ஐக்கிய மக்கள் சக்தி, அரசாங்கத்திற்கு மிகவும் கீழ்ப்படிந்துவிட்டதாக கூட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் ரணில் விக்ரமசிங்கவிடம் நேரடியாகக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *