அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு

ஹோமாகம, பனாகொட, சுஹத மாவத்தை பகுதியில் உள்ள வீட்டின் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை.

இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்பதை கண்டறிய  விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார்  தெரிவித்தனர். 

சம்பவம் குறித்து ஹோமாகம தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *