பால் போத்தலுடன் குழந்தையின் எச்சம்!- செம்மணியில் இதுவரை 80 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனிதப்  புதைகுழி இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு இன்று 17ம் நாள் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனிதப்  புதைகுழி இடத்தில் இன்று மொத்தம் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன.

எச்சங்களில், 6 முதல் 7 வரை சிறுவர்கள்  மற்றும் குழந்தைகளுடையதாக இருக்கலாம்  என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுள்ளன .

 ஒரு குழந்தைகள் அருந்தும் பால் போத்தல்  மற்றும் சில ஆடையை ஒத்த துணிகள்  கண்டுபிடிக்கப்பட்டன.

இன்றைய கண்டுபிடிப்புகளுடன், இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது 

இவற்றில்  65 எலும்புக்கூடுகள் ஏற்கனவே முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

⭕https://fb.watch/A-n-DwFcCW/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *