வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு- அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 15 ம் திகதி திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இதனையடுத்து வருடாந்த மஹோற்சவத்தில் கடந்த 8 நாட்கனாக பூஜை, வசந்த மண்டப பூஜை, சுவாமி உள்வீதியுலா,வெளிவீதியுலா என்பன நடைபெற்றன. 9 ஆம் நாளான இன்று இரதோற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆலயத்தில் இடம்பெற்ற, விசேட கிரியை வழிபாடுகளை தொடர்ந்து, வசந்த மண்டபம் பூஜை நடைபெற்றதை தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோசத்துடன் மாமாங்கேஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட தேரில் அருள் பாலித்தார்.
மூர்த்தி ,தலம் ,தீர்த்தம் மூன்றும் ஒருங்கே அமையப்பெற்று,இராம பிரானால் வழிபட்டதாக கூறப்படும், வரலாற்றை தொன்மை வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தோற்சவம் ஆடி அமாவாசை தினமான நாளை சிறப்பாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.