எசல பெரஹராவை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு, இலங்கை ரயில்வே திணைக்களம் பல விசேட ரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த விசேட ரயில் சேவைகள், ஒகஸ்ட் 4 முதல் ஒகஸ்ட் 8 வரை இயக்கப்படவுள்ளன.

இவை கொழும்பு கோட்டை, கண்டி, மாத்தளை, நாவலப்பிட்டி, மற்றும் பொல்கஹவெல ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கண்டிக்குச் செல்லும் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக 8 விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *