மட்டக்களப்பில் இரு தினங்களுக்கு முன் காணாமல்போன கூலி தொழிலாளி சடலமாக மீட்பு

 

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் காணாமல் போன கூலி தொழிலாளி இன்று மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகிலுள்ள தேவாலயத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் 63 வயதுடைய கிரான்குளத்தைச் சேர்ந்தவர் என  பொலிஸார் தெரிவித்தனர்.

கூலி தொழிலை மேற்கொண்டுவரும் குறித்த நபர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் மீண்டும் வீடு திரும்பாத நிலையில் அவரை உறவினர்கள் தேடியுள்ளனர். 

இந்நிலையில்  குறித்த நபர் மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகிலுள்ள தேவாலயத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இதனையடுத்து குறித்த நபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து  வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *