சுகாதார அமைச்சுக்கு காலக்கெடு; நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் வைத்தியர்கள்!

வைத்தியர்களின் இடமாற்றங்களை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம அறிவித்துள்ளது. 

சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹன்சமல் விஜேசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் 11 ஆம் திகதி காலை 8.00 மணிக்குள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அவர் கூறினார். 

சுகாதார அமைச்சுக்கு நாங்கள் ஒரு காலக்கெடுவை வழங்கியுள்ளோம். நாங்கள் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளோம். ஆனால் இந்த அதிகாரிகள் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள். 

ஏதேனும் காரணத்தால் 11 ஆம் திகதி காலை 8.00 மணிக்குள் இது தொடர்பாக சுகாதார அமைச்சு நேர்மறையான தலையீட்டைச் செய்யத் தயாராக இல்லை என்றால், அதன்படி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *