க்ளீன் சிறீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கடற்றொழில் அமைச்சினால் மீன் பிடிக்கலங்களின் கணக்கெடுப்பு வாரமாக இம்மாதம் 04ம் திகதி தொடக்கம் 20ம் திகதிவரை பிரகடனப்படுத்தி மீன் பிடிக்கலங்களின் கணக்கெடுப்பு நாடுபூராகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
பூநகரி கடற்றொழில் பரிசோதகர் மகேந்திரநாதன் நக்கீரன் தலைமையில் பள்ளிக்குடா இறங்கு துறையில் மீன் பிடிக்கலங்கள் கணக்கெடுக்கப்பட்டன